புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அரசு ஊழியர்களுக்கு 10 நாள் சிறப்பு விடுமுறை: அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 30, 2019

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அரசு ஊழியர்களுக்கு 10 நாள் சிறப்பு விடுமுறை: அரசாணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியர்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற 10 நாள் சிறப்பு விடுமுறை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் புற்றுநோய்க்கு கீமோ தெரபி மற்றும் ேரடியோ தெரபி சிகிச்சை பெற ஊதியத்துடன் கூடிய 10 நாள் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் நடந்த மானிய கோரிக்கையின் போது அறிவித்தார். இந்நிலையில், இந்த விடுப்பு வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, தமிழக அரசு ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் புற்றுநோய் தொடர்பாக சிகிச்சை பெற செல்லும் போது ஊதியத்துடன் 10 நாள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இதில் கீமோ தெரபி சிகிக்சை பெற 1 நாளும், ரேடியோ தெரபி சிகிச்சை பெற 1 நாளும், சிகிச்சையிலிருந்து மீண்டுவர 8 நாள் என்று மொத்தம் 10 நாள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இந்த விடுப்பு பெற சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் அல்லது பொறுப்பு அலுவலர் ஆகியோரிடமிருந்து மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews