👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தபால் ஊழியர்கள் தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. - எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு மத்திய அரசிடம் விளக்கம் பெறும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தி.மு.க. மாணவர் அணி செயலரும் எம்.எல்.ஏ.வுமான எழிலரசன் தாக்கல் செய்த மனு:தபால் துறை ஊழியர்கள் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்தனர். தகவல் தொடர்பு துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் 'ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் தேர்வு எழுதலாம்; உள்ளூர் மொழியாக ஹிந்தி இல்லாதபட்சத்தில் உள்ளூர் மொழியில் தேர்வு எழுதலாம்' என கூறப்பட்டது.சுற்றறிக்கையின்படி தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழில் தேர்வு எழுதலாம். இந்நிலையில் தபால் சேவை வாரியம் பிறப்பித்த உத்தரவில் 'உள்ளூர் மொழிகளில் தேர்வு எழுத அனுமதியில்லை' என கூறப்பட்டது.
தபால் துறை எடுத்த திடீர் முடிவு சட்டவிரோதமானது.தமிழகத்தில் தமிழ் தான் அலுவல் மொழியாக உள்ளது. எனவே தபால் சேவை வாரியத்தின் சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். தமிழ் உள்ளிட்ட இதர பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி ''ஹிந்தி பிராந்திய மொழியாக ௧௦ மாநிலங்களில் உள்ளது. ஹிந்தியை தாய்மொழியாக மற்றும் பயிற்றுவிக்கும் மொழியாக கொள்ளாத மாநில மக்கள் பாதிக்கப்படுவர்'' என்றார்.மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் ''தபால் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது'' என்றார். அதற்கு மூத்த வழக்கறிஞர் வில்சன் ''தேர்வு ரத்தாகி விட்டதால் தமிழ் மொழியில் தேர்வு எழுத அனுமதித்ததாக கூற முடியாது'' என்றார்.இதையடுத்து மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுதலாமா என்பது குறித்து விளக்கம் பெறும்படி மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ௨௩ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U