`காலை உணவு சாப்பிடாதவர்கள் யார்?'- மாணவர்களை நெகிழவைத்த பள்ளி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2019

`காலை உணவு சாப்பிடாதவர்கள் யார்?'- மாணவர்களை நெகிழவைத்த பள்ளி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தூத்துக்குடியில் உள்ள ஆர்.சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களின் பங்களிப்பால் தினமும் காலை, முதல் பாடவேளையில் மாணவர்களின் ஆரோக்கியத்துக்காக முளைகட்டிய பாசிப்பயறு வழங்கப்படும் கையளவு உணவுத்திட்டம் பாரட்டைப் பெற்றுள்ளது. தூத்துக்குடியில் உள்ள டி.சவேரியார்புரத்தில் உள்ளது அரசு உதவிபெறும் ஆர்.சி.தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் 161 மாணவர்கள், 166 மாணவிகள் என மொத்தம் 327 பேர் படித்து வருகிறார்கள். 14 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்துவருகிறார்கள். இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்தே பெரும்பாலான மாணவர்கள் இப்பள்ளிக்கு வருகின்றனர். தினமும் காலையில் கூட்டுப்பிரார்த்தனைக்குப் பிறகு முதல் பாடவேளையின் தொடக்கத்தில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பறையில் முளைகட்டிய பாசிப்பயறு வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் பங்களிப்பால் கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது கையளவு உணவுத் திட்டம்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபட் கிங்கிடம் பேசினோம், ``ஆர்.சி மேனேஜ்மென்டின் கீழ் இந்தப் பள்ளி இயங்குகிறது. போன வருஷம் ஜூலை மாசத்துல ஆர்.சி பள்ளிகளின் கண்காணிப்பாளரான அருட்தந்தை பென்சிகர் ஆய்வுக்காக எங்க பள்ளிக்கூடத்துக்கு வந்தபோது, `காலை உணவு சாப்பிடாம ஸ்கூலுக்கு வந்தவங்களெல்லாம் கையை உயர்த்துங்க’ன்னு சொன்னார். அப்போது, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கையை உயர்த்தினாங்க. ``ஏன் காலை உணவு சாப்பிடல”ன்னு மாணவர்களிடம் கேட்டபோது, ``தினமும் காலையில சீக்கிரமாவே அம்மா, அப்பா ரெண்டு பேருமே வேலைக்குப் போயிடுறதுனால காலை சாப்பாடு தயார் செய்யமாட்டாங்க, குளிச்சிட்டு யூனிஃபார்ம் டிரெஸ்ஸ மாட்டிக்கிட்டு கிளம்பி வந்திடுவோம்”னு பெரும்பாலான மாணவர்கள் ஒரே காரணத்தையே சொன்னாங்க.
காலை உணவின் அவசியத்தை வலியுறுத்தி பேசிய அவர், ஆசிரியர்களுடனான கூட்டத்தில் ``மாணவர்களுக்கு காலையில் ஆரோக்கியமா ஏதாவது சிறிய உணவு அல்லது சிற்றுண்டிபோல கொடுக்க வேண்டும். நாமதான் மாணவர்களோட ஆரோக்கியத்தைப் பேணுவதில் பங்கெடுக்க வேண்டும்” எனச் சொன்னார். அடுத்த சில நாள்களில் மீண்டும் ஆசிரியர் கூட்டம் கூட்டி, தினமும் காலையில சிற்றுண்டியாக பாசிப்பயறை முளைகட்டி கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். தினமும், 327 மாணவர்களுக்கு தலா 2 கிலோ முளைகட்டிய பாசிப்பயிறை முதல் பாடவேளையில் கொடுத்துட்டு வர்றோம். தினமும், காலையில் பாசிப்பயிறை புடைத்து பக்குவம் பார்த்து ஸ்டோர் ரூமில் உள்ள பானையில் ஊறப் போடுவோம். மாலையில் வடிகட்டி நார்ப்பெட்டியில் போட்டு துணியால் கட்டி முளைகட்ட வைத்துவிடுவோம். இதற்காக ஒவ்வொரு வாரமும் மூன்று ஆசிரியர்கள் என்று அட்டவணை போட்டிருக்கோம். பாசிப்பயறு வகைக்காக ஒரு மாதத்துக்கு ரூ.4,000 வரை செலவாகிறது. இதை 12 ஆசிரியர்களும் பங்கிட்டுக் கொள்கிறோம். மாணவர்களின் ஆரோகியத்துக்கு முளைகட்டியப் பயறு ஏற்றதாக இருக்கிறது” என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews