👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்கள், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவதை தவிர்க்க, ஆனைக்கட்டியில் உள்ள, அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தைச்சேர்ந்த, மலைகிராமமான ஆனைகட்டியில், அரசு பழங்குடியினர் நல, உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
கடந்த 1966 ஆம் ஆண்டு திண்ணைப்பள்ளியாக துவங்கப்பட்ட இந்த பள்ளி, படிப்படியாக துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாகி, தற்போது உயர்நிலைப்பள்ளியாக உயர்ந்துள்ளது. இங்கு ஆனைகட்டி சுற்றியுள்ள மலைகிராமங்கள் மற்றும் கேரளா மாநிலம் அட்டப்பாடி பழங்குடியின மலை கிரமாங்களான சோலையூர், சிறுவாணி எஸ்டேட் உள்ளிட்ட 30 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
10ம் வகுப்பு வரை உள்ள நிலையில், பொது தேர்வு எழுதவும், மேல்நிலை பள்ளியில் சேரவும்,16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னதடாகம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும். மேலும் போதிய பேருந்து வசதி இல்லாத நிலையில், வழியில் பலர் மது அருந்துவதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுவதாகவும் கூறியுள்ளனர்.
பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் வேல்ஸ்புரம் ஆகிய ஆதி திராவிடர் நல பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத தேர்ச்சி பெற்று வரும் ஆனைகட்டி உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U