👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரயிலில் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற, பள்ளி மாணவ - மாணவியரின் ஆசையை நிறைவேற்ற, ரயில் பெட்டிகள் போல, பள்ளி கட்டடத்தில் வர்ணம் அடித்து, தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பிள்ளைப்பாக்கத்தில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.இந்த பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, பொதுமக்கள் நன்கொடையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறை உள்ளிட்ட வசதிகளை, பள்ளி நிர்வாகத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த பள்ளி கட்டடத்தில், ரயில் பெட்டிகள் போல் வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது, மாணவர்கள் மட்டுமின்றி, மக்களையும் கவர்ந்துள்ளது.இதன் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது. தலைமை ஆசிரியை, உண்ணாமலை தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீபெரும்புதுார் கல்வி மாவட்ட அலுவலர், மதிவாணன் பங்கேற்று, பச்சை கொடியசைத்து, ரயில் பெட்டி போல் வர்ணம் அடித்த சுவரை திறந்து வைத்தார்.
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அதன் அருகே நின்று, ரயிலில் செல்வது போன்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை, உண்ணாமலை கூறியதாவது:மாணவர்கள், ரயிலில் சுற்றுலா செல்ல ஆசைப்படுவதாக, என்னிடம் கூறினர். மாணவர்களின் ஆசையை நிறைவேற்றவும், சேர்க்கையை அதிகரிக்கவும், பள்ளியில் உள்ள நான்கு வகுப்பறை சுவரில், ரயில் வரைந்துள்ளோம். கதவு, ஜன்னல்களை, ரயில் பெட்டி போல், பெயின்ட் செய்து மாற்றியுள்ளோம்.இது, பார்ப்பதற்கு, தத்ரூபமாக ரயில் போல் இருப்பதால், பள்ளி இடைவெளி நேரத்தில், மாணவர்கள், ரயிலில் ஏறி இறங்குவதை போல், விளையாடுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U