நாமக்கல் அருகே பொன்னேரிப்பட்டியில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாத அரசு தொடக்கப் பள்ளி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 23, 2019

நாமக்கல் அருகே பொன்னேரிப்பட்டியில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாத அரசு தொடக்கப் பள்ளி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாமக்கல் அருகே பொன்னேரிப் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்தாண்டு ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாததால், பள்ளி வெறிச்சோடி காணப்படு கிறது. மாணவர்கள் இல்லாத போதும் தலைமையாசிரியர் மட்டும் நாள் தவறாமல் பள்ளிக்கு வந்து சென்று வருகிறார். நாமக்கல் அருகே மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு மாணவர் கூட சேர்க்கப் படவில்லை. எனினும், பள்ளி தலைமை ஆசிரியர் அ.பிரேமகுமாரி மட்டும் பள்ளிக்கு நாள் தவறாமல் காலை 8.40 மணிக்கெல்லாம் வந்து பள்ளியை திறந்து வைத்து நாள் முழுக்க அமர்ந்திருந்துவிட்டு, பின்னர் மாலையில் 4 மணியளவில் வீடு திரும்பிச் செல்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் 4 மாணவர்கள் மட்டுமே பள்ளியில் பயின்று வந்துள்ளனர். இதில் ஏற்கெனவே 2 மாணவர்கள் வெளியேறிய நிலையில் கடந்த ஆண்டு பள்ளியில் பயின்ற 2 மாணவர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சென்றுவிட்டனர். எனினும், புதிதாக மாணவர்கள் யாரும் பள்ளியில் சேர்க்கப்படாததால், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை மாணவர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அ. பிரேமகுமாரி கூறுகையில், பள்ளியில் இரு ஆசிரியர்கள் பணிபுரிந்தோம். மாணவர்கள் இல்லாததால், மற்றொரு ஆசிரியர் அருகே உள்ள பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனக்கு வேறு பணியிடம் வழங்காததால், பள்ளிக்கு வந்து செல்கிறேன். கிராம மக்கள் பள்ளியில் ஆங்கில வகுப்பு தொடங்க வலியுறுத்துகின்றனர். ஆங்கில வகுப்பு தொடங்கினால் பள்ளியில் மாணவர்களை சேர்ப்ப தாக தெரிவிக்கின்றனர். ஆனால், குறைந்தபட்சம் 15 மாணவர் களாவது ஆங்கில வகுப்பில் சேர வேண்டும். அப்போது தான், ஆங்கில வகுப்பு தொடங்க இயலும். கடந்த ஆண்டு 2 மாணவர் கள் மட்டும் படித்தனர். அவர்களும் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சென்றதால், மாணவர்கள் யாரும் இல்லை, என்றார்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலு வலர் மு.அ.உதயகுமார் கூறுகை யில், பொன்னேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும், மாணவர்கள் பள்ளியில் சேரவில்லை. அருகே உள்ள பிற பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லை. இதன்காரணமாக ஆசிரியர்கள் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில அளவில் மாணவர்களே இல்லாத பள்ளியில் இதுவும் ஒன்று. எனினும், பள்ளி மூடப்படாது. ஆசிரி யர்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை நடந்தால், மீண்டும் பள்ளி செயல்படும், என்றார். கடந்த 1970-ம் ஆண்டு தொடங் கப்பட்ட இப்பள்ளி ஏறத்தாழ 60 ஆண்டு பாரம்பரியத்தைக் கொண் டது. கிராமத்தின் அடையாளமாக உள்ள இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி பள்ளி தொடர்ந்து செயல்பட மாவட்ட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews