அரசு பள்ளி மாணவர்களுக்கு "நாளைய கலாம் விருது" - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 29, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு "நாளைய கலாம் விருது"

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த. இரு அரசு பள்ளி மாணவர்களுக்கு, ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில், 'நாளைய கலாம் விருது' வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் நினைவையொட்டி, காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில், அறிவியல் துறையில் சிறந்து விளங்கும், மாவட்டத்திற்கு இரு அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நாளைய கலாம் விருது' வழங்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், அங்கம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர் ஆர்.விமல்ராஜ், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் ஆர்.பிரவீன்குமாருக்கு, ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில், இந்த விருது வழங்கப்பட்டது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர், சுப்பையா, சமத்துவ வழக்கறிஞர் சங்க நிறுவனர், பார்வேந்தன், காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர், நிறுவனர் லாரன்ஸ் ஆகியோர் விருது வழங்கினர்.அங்கம்பாக்கம் பள்ளி தலைமையாசிரியர் தணிகை அரசு, அறிவியல் ஆசிரியர் சேகர், ஆசிரியர் சரவணன், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews