👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜ் பல்கலை புதிய பதிவாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை தேர்வுக் குழு ஒருவாரம் ஒத்தி வைத்தது.இப்பல்கலையில் காலியாக உள்ள பதிவாளர் பதவிக்காக பல்கலை, கல்லுாரி தேர்வாணையர், பேராசிரியர்கள் உட்பட 24 பேர் விண்ணப்பித்தனர். இதில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள மற்றும் பாலியல் புகாரில் சிக்கிய இருவரின் விண்ணப்பங்களும் அடங்கும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் சந்தோஷ்பாபு, அழகப்பா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ஜெயகாந்தன், பாரதியார் பல்கலை ஓய்வு பேராசிரியர் ஜெயக்குமார் கொண்ட தேர்வுக் குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்தது. சிலரது பட்டச் சான்றுகளில் மதிப்பெண் விபரம் சதவீதத்தில் இல்லை.முதல் வகுப்பு தேர்ச்சி அல்லது இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி என மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சிலரின் விண்ணப்பங்கள் அவர்கள் பணியாற்றும் கல்லுாரி முதல்வர் மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு பதில் கல்லுாரி நியமன அதிகாரி பரிந்துரை கடிதம் இணைக்க வேண்டும் என தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், &'&'விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை நிறைவு செய்ய தேர்வுக் குழு ஒரு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளது. அதற்கு பின் பரிசீலனை முடிவு குறித்து இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்&'&' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U