கல்வி வளர்ச்சிக்காக குரல் கொடுப்போம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

கல்வி வளர்ச்சிக்காக குரல் கொடுப்போம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வியின் வளர்ச்சிக்காக, சட்டசபையில், தி.மு.க., தொடர்ந்து, குரல் எழுப்பும்,&'&' என, அக்கட்சி தலைவர், ஸ்டாலின் பேசினார். சென்னை, கொளத்துார் தொகுதியில் உள்ள, லுார்து மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பூர், சென்னை மேல்நிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச நோட்டு புத்தகங்கள், &'லேப்டாப்&' வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
அதில், ஸ்டாலின் பேசியதாவது: மாணவ பருவம் என்பது, நினைத்த நேரத்தில் கிடைக்கக் கூடியதல்ல. அப்படிப்பட்ட பருவத்தில் தான், அறிவை, கல்வியை, வளர்ச்சியை, ஆற்றலை, வளர்த்துக் கொள்ள முடியும்.நாட்டில், ஆட்சி செய்வதற்கு, பல கட்சிகள் வரலாம். ஆட்சி பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள், பல திட்டங்களை, பல பணிகளை, பல காரியங்களை, மக்களின் முன்னேற்றத்திற்காக செய்யலாம்.ஆனால், எல்லாவற்றையும் தாண்டி கல்விக்கு, எந்த அரசு முன்னுரிமை தருகிறதோ, அந்த அரசு தான் நிலைத்து நிற்கும். கல்விக்கு, காமராஜர் முக்கியத்துவம் தந்தார். சமச்சீர் கல்வி என்ற, அற்புதமான திட்டத்தை, கருணாநிதி நிறைவேற்றி தந்தார். கல்வி வளர்ச்சிக்காக, சட்டசபையில், தி.மு.க., தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews