👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்திலுள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும்போது, யூஜிசி விதிகளை பின்பற்றுவதில்லை. எனவே, யூஜிசி விதிப்படி குறைந்தபட்சம் எம்பில், பிஎச்டி தகுதி உள்ளோரைக் கொண்டு நிரப்பக்கோரி ராஜேஷ், ஜெஸ்லின் பிரிசில்டா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனித்தனியே மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் ஏனைய தகுதிகள் அனைத்தும் யூஜிசியால் வரையறை செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதற்கும் பொருந்தும். யூஜிசி விதிப்படி உதவி பேராசிரியர் பணிக்கு திறந்தவெளி கல்வி பட்டம் தகுதியானது அல்ல. திறந்தவெளி கல்வி முறை மற்றும் தொலைதூர கல்வி முறைகளில் பட்டம் பெற்றவர்கள் யூஜிசி விதிப்படி உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள்.
ஆசிரியர் பணி என்பது உயர்வானது. வகுப்பறையில் பாடம் நடத்துவது ஒரு திறமையான கலை. இதற்கு வகுப்பறை அனுபவம் அவசியம். எனவே, முழுநேர கல்லூரிகளில் முறையாக பயின்றவர்களை நியமிக்க வேண்டும். இதுகுறித்து யூஜிசி விதிகளை பிறப்பித்துள்ளது. இதன்படியே, உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உதவிப் பேராசிரியர் நியமனங்கள் அனைத்தும் யூஜிசி விதிப்படியே நடக்கிறது என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U