👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வெளிப்படைத் தன்மையோடு தேர்வுகள் நடத்தப்படுகின்றன,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - கே.பி.பி.சாமி: சப் - கலெக்டர்கள், டி.எஸ்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, 2017ல், டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 1 தேர்வு நடந்தது. அதில், 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. இதை, நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால், 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கவலைப்படாமல், முதன்மை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; இதை நிறுத்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., நிறுவனம் தொடர்ந்து, தேர்வில் குளறுபடி செய்து வருகிறது.
அதற்கு, என்ன காரணம்?அமைச்சர் ஜெயகுமார்: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வெளிப்படையாக நடத்தப்படுகிறது. தேர்வுக்கான வினாக்களை, வல்லுனர் குழு தயார் செய்கிறது. இதில், தவறு நடப்பதில்லை. நீதிமன்றத்தில், தவறான கேள்வி கேட்கப்பட்டதாக ஒப்புக்கொள்ளவில்லை; அது, தவறான தகவல்.கே.பி.பி.சாமி: ஆவின் நிறுவனத்தில், 315 'டேங்கர்' லாரிகளில், பால் எடுத்து செல்ல, 240 கோடி ரூபாய்க்கு, 'டெண்டர்' விடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோதும், விதிகளை மீறி, டெண்டர் விடப்பட்டது.
தற்போது, டெண்டர் மதிப்பு, 360 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: எந்த விதிமீறலும் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U