👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சட்ட படிப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், 'அரியர்' தேர்வை எழுதுவதற்கான அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது .
உயர்கல்வி படிப்புகள் அனைத்தும், மத்திய அரசின் பல்கலை மானிய குழு மற்றும் பிற மத்திய கல்வி அமைப்புகளால் கண்காணிக்கப்படுகின்றன. அனைத்து கல்லுாரிகள், பல்கலைகளில் பட்டப்படிப்பை நடத்துவதற்கான விதிகளை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வகுத்துஉள்ளது.ஒவ்வொரு பட்டப் படிப்பையும், அதற்கான காலத்திற்குள் முடிக்க வேண்டும். சில பாடங்களில் அரியர் வைத்திருந்தால், படிப்பு காலம் முடிந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்ற, கட்டுப்பாடும் அமலில் உள்ளது.
ஆனால், பெரும்பாலான பல்கலைகள் மற்றும்கல்லுாரிகள், இந்த விதிகளை பின்பற்றுவதில்லை. மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து, அவகாசத்தை நீட்டித்து, தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்குகின்றன. சட்ட படிப்பிலும், கூடுதல் அவகாசம் நடைமுறையில் இருந்தது. இந்த அவகாசத்தை குறைத்து, பல்கலையின் சிண்டிகேட் குழு முடிவு எடுத்துள்ளது.
இது குறித்து, பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கை:சட்ட பல்கலை மற்றும்அதன் இணைப்பு கல்லுாரிகளில், பட்டப் படிப்பை உரிய காலத்தில் முடிக்காதவர்கள், இனி கூடுதலாக, இரண்டு ஆண்டுகள் மட்டுமே, அரியர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதாவது, எல்.எல்.பி., படிப்பு காலமான, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு காலத்திற்கு பின், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் மட்டும், அரியர் பாடங்களை எழுத அவகாசம் தரப்படும்.
இந்த விதி, நடப்பு கல்வி ஆண்டில், சேரும் மாணவர்களுக்கு அமலாகிறது. இதற்கு முன் கல்லுாரிகளில் சேர்ந்தவர்களுக்கு, அவர்களது படிப்பு காலம் முடிந்து, மூன்று ஆண்டுகள் மட்டும், அரியர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் சலுகை காலம் கிடையாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U