👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து, சட்டசபையில், இன்று விவாதிக்கப்படலாம்,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.
அவரது பேட்டி: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விலக்கு கோரும், தமிழக சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து, அதிகாரப்பூர்வமாக, இன்னும் தகவல் வெளியாகவில்லை. எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின், அதுதொடர்பாக, சட்டசபையில், விளக்கம் தரப்படும்.சட்டசபை நடக்கும் நேரத்தில், பிரதான விவகாரமாக இருக்கும், நீட் தேர்வு குறித்து, ஊடகத்தில் கூறுவது மரபல்ல .
சட்டசபையில், திங்கள் கிழமை, நீட் விவகாரம் குறித்து பேசப்படலாம். அப்போது, அதற்கான விடைகள் கிடைக்கும்.அருந்ததியர் சமுதாயத்தை சார்ந்தவருக்கு, ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பை கொடுத்துள்ளோம். இஸ்லாமிய சமுதாயத்தை மதிக்க வேண்டும் என, அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளோம்.எனவே, சாதாரண கீழ்மட்ட தொண்டர்களுக்கும், மதிப்பளிக்கும் கட்சி, அ.தி.மு.க., என்பதை, நாங்கள் நிரூபித்துள்ளோம். எனவே, பிரிட்டிஷ்காரர்களை போல, ஆட்சி செய்பவர்கள் நாங்கள் அல்ல.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U