பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு, அடுத்தாண்டு, இலவச ஷூக்கள் வழங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:பள்ளிக்கல்வித் துறை மூலம், முதல் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வரை, பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறோம். தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசாக, இந்த அரசு உள்ளது. இதன்படி, ஆறு முதல், பிளஸ் 2 வரை, மாணவ - மாணவியர் அனைவருக்கும், அடுத்தாண்டு முதல், இலவச ஷூக்கள் வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்பறையும், செப்., 15க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.அரசு பள்ளி மாணவர்கள், சரளமாக ஆங்கிலம் கற்க, நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். விரைவில் நான்காவது கட்டமாக, 'லேப்டாப்' வழங்கும் பணி துவங்க உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது . அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நடப்பு கல்வியாண்டில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017 - 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவா்களுக்கு 3 மாத காலத்தில் மடிக்கணினி வழங்கப்படும் . நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார் .மேலும் மாணவர்களுக்கு 'யூ டியூப்' பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும் என்றும் வகுப்பறையில் நடத்தும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் கூறியுள்ளார் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் ஷு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களுக்கு யூ டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும்; வகுப்பறையில் நடத்தும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews