👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது.
இந்தநிலையில், அதில் காலியாக இருந்த இடங்களுக்கும், கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்துவிட்டு கல்லூரியில் மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களுக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) தொடங்கி ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 146 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீட்டுக்கான 69 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதைத் தவிர, சிதம்பரம் ராஜா முத்தையா, கே.கே.நகர் இஎஸ்ஐ, ஐஆர்டி பெருந்துறை ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 48 எம்பிபிஎஸ் இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
அதேபோன்று, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக இருக்கும் 16 பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்பட உள்ளன
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U