பி.இ.படிப்பிற்கான துணை கலந்தாய்வு சென்னை தரமணியில் நாளை தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

பி.இ.படிப்பிற்கான துணை கலந்தாய்வு சென்னை தரமணியில் நாளை தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.இ.படிப்பிற்கான துணை கலந்தாய்வு, சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நாளை தொடங்க உள்ளது. பொறியியல் துணை கலந்தாய்வு நாளை தொடங்கி வரும் 30ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 12 சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதல் சுற்றில் கலந்து கொள்ள முடியாமல் இருந்த மாணவர்களுக்காக துணை கலந்தாய்வு நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டிய நாள் மற்றும் நேரம் இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை www.tneaonline.in என்ற இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வின் போது, பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.5000, பட்டியல் வகுப்பினர் ரூ.1,000 பதிவுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் நாளை துவங்கும்' என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. பொதுப் பாட பிரிவுக்கான கவுன்சிலிங் நேற்றுடன் முடிந்தது.இதையடுத்து பிளஸ் 2 துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு துணை கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்குக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் முடிந்தது. தொடர்ந்து துணை கவுன்சிலிங் நாளை துவங்க உள்ளது.'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும் இதில் பங்கேற்பவர்களுக்கான அழைப்பு கடிதம் தபாலிலும் இ - மெயிலிலும் அனுப்பப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews