மடிக்கணினி வேண்டி மாணவர்கள் சாலைமறியல்: 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

மடிக்கணினி வேண்டி மாணவர்கள் சாலைமறியல்: 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவள்ளூர் மாவட்டத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் கொட்டும் மழையில் மடிக்கணினி வேண்டி முன்னாள் மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017 மற்றும் 2018 ஆகிய கல்வி ஆண்டில் பயின்ற 4 பிரிவில் சுமார் 1080 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து அங்கு திடீரென ஒன்று திரண்ட மாணவர்கள் அனைவரும் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இந்த சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை அடுத்து கண்டிப்பாக 20 நாட்களில் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என காவல்துறையினர் முன்னிலையில் அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் காவல்துறையினரின் சமரச பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் செய்து அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews