பிளஸ் 2 புத்தகம் வழங்க தாமதம் மாணவர்கள் குழப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

பிளஸ் 2 புத்தகம் வழங்க தாமதம் மாணவர்கள் குழப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் பாக புத்தகங்கள் வழங்கப்படாததால், பாடம் நடத்தும் தள்ளி போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியில், 13 ஆண்டுகளுக்குப்பின், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாட திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பொது தேர்வு நடத்தப்படும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது.புதிய பாட திட்டத்தின்படி, தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதில், பிளஸ் 2வுக்கு, இரண்டு பாகங்களாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதல் பாக புத்தகங்கள், ஜூன் இரண்டாம் வாரத்தில் வழங்கப்பட்டன. அவற்றில் உள்ள பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.காலாண்டு தேர்வுக்கு முன், முதல் பாகத்தின் பாடங்கள் முடிந்து விடும். அதன்பின், இரண்டாம் பாகத்தின் பாடங்கள் நடத்தப்படும். செப்., முதல், இதற்கான வகுப்புகள் துவங்கும். ஆனால், இரண்டாம் பாகத்தின் புத்தகங்கள், இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.காலாண்டு தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இரண்டாம் பாகத்தின் புத்தகங்கள், உரிய நேரத்தில் கிடைக்குமா, பாடங்கள் நடத்துவது தாமதமாகுமா என்று தெரியாமல், மாணவர்களும், ஆசிரியர்களும் தவிப்பில் உள்ளனர்.பிளஸ் 2 மாணவர்கள், 'நீட்' உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அவர்களுக்கு பாட புத்தகங்களை விரைந்து வழங்கினால் மட்டுமே, தேர்வுகளுக்குத் தயாராக முடியும். எனவே, புத்தகங்களை விரைந்து வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews