👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு 24ம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இன்ஜினியரிங் கலந்தாய்விற்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 1 தொடங்கி 31ம் தேதி வரை நடந்தது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நேரடி கலந்தாய்வு நடந்தது. இந்தநிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கியது. முதல் சுற்றில் சீட் தேர்வு செய்த மாணவர்களுக்கு ஜூலை 13ம் தேதி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தநிலையில், அண்ணாபல்கலைக்கழகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், அண்ணாப்பலகலைக்கழகத்தின் கீழ் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் இஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 3 கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். மாணவர்களுக்கான 11 நாள் சிறப்பு வகுப்பு ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களின் கட்டணத்தை
www.aukdc.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U