அரசுப் பள்ளிக்கு மாறிய 1 லட்சம் மாணவர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

அரசுப் பள்ளிக்கு மாறிய 1 லட்சம் மாணவர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படித்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நடப்பாண்டியில் அரசுப் பள்ளியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி மீதுள்ள மோகத்தால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள், தங்களது குழந்தைகளை, பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தனியார் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அதிக கல்விக் கட்டணத்தால் செய்வதறியாது திகைத்த பெற்றோர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் கொண்டுவரப்பட்டுள்ள ஆங்கில வழிக் கல்வி வரப்பிரசாதமாக மாறியுள்ளது. இதனால் கல்விக் கட்டண சுமையிலிருந்து விடுபட பெற்றோர் அரசுப் பள்ளிகளை நாட தொடங்கியுள்ளனர். அதன்படி 2018-19ம் கல்வியாண்டில், அரசுப் பள்ளியில், முதலாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 93 ஆயிரமாக இருந்தது. நடப்பு கல்வியாண்டில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 16 ஆயிரமாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் 23 ஆயிரத்து 32 மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 774 ஆக உயர்ந்துள்ளது. நான்காம் வகுப்பில் 27 ஆயிரத்து 868 மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் 23 ஆயிரத்து 859 மாணவர்களும் தனியார் பள்ளியில் படிப்பதை விடுத்து அரசுப் பள்ளிக்கு மாறியுள்ளனர். தனியார் பள்ளியில் கல்விக்கட்டணம் அதிகரித்ததே மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு மாறக் காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews