மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2019

மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை 10 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி மாவட்டம் தோட்டத்துவிளை கிருஷ்ண வி.நாயர் தாக்கல் செய்த மனு&'நீட்&' தேர்வில் 320 மதிப்பெண் பெற்றுள்ளேன். நான் இதர பிரிவை (ஓ.சி.,) சேர்ந்தவன். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சமூகத்தினருக்கு 10 சதவீத இடதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதைப் பின்பற்ற அனைத்து அரசு கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.இதன்படி மருத்துவ மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்கள் அதை நடைமுறைப்படுத்துகின்றன. தமிழகத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. இது சட்டவிரோதம்.தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டிற்கான முதற்கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க உள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளேன். 10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இந்த ஒதுக்கீட்டை பின்பற்றாமல் நடத்தப்படும் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கிருஷ்ண வி.நாயர் மனு செய்தார்.இந்திய மருத்துவக் கவுன்சில் செயலர், தமிழக சுகாதாரத்துறை செயலர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், வழக்கை ஒரு வாரம் ஒத்திவைத்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews