👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், புதிய கல்விக்கொள்கை, தேசிய கல்வி ஆணையம் அமைப்போம் என்றும் வாக்குறுதிஅளித்தது.அதன்படி கடந்த பா.ஜ., ஆட்சியில், புதிய கல்விக்கொள்கையை வகுக்ககஸ்துாரிரங்கன் தலைமையில் 9 நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனதுபரிந்துரையை மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் சமர்ப்பித்தது.அதனை நேற்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் சமர்ப்பித்தார்.பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக https://mhrd.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளவும் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக்கல்வி என்பது தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்தியமொழி என்று இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும்,மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதாவது இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றும்,இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி,ஆங்கிலம், இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.புதிய கல்விக்கொள்கை வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை, nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ''இது வரைவு அறிக்கைதான். அரசின் கொள்கை அல்ல. எந்த மாநிலத்தின் மீதும் மொழிகளை திணிக்க மாட்டோம்'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U