👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போலீஸ் ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் நிபுணர் பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.தமிழக போலீசில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் சமூகவியல் மற்றும் பொருளியல் குறித்த பணிகளை மேற்கொள்வதற்கு பொருளியல் மற்றும் சமூகவியல் நிபுணர்கள் இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான போட்டி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் 24ல் நடத்துகிறது. இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. ஜூலை 23 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.இந்த பதவிக்கு குறைந்தபட்சம் 56 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 1.77 லட்சம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூகவியல் மற்றும் பொருளியலில் முதுநிலை பட்டம் முடித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U