👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

மரம் நட்டால் மழை பெய்யும்… மரம் இல்லையேல் உயிர்கள் இல்லை… இப்படியான வாசகங்களைக் கேட்டுவிட்டு நகர்ந்து செல்பவர்களே அதிகம். அதிலும், சிலர் மரக் கன்றுகளை நடுகிறார்கள். அதிலும் வெகு சிலரே நடப்பட்ட மரக் கன்றுகள் பெரிய மரமாகும் வரை தினம் தினம் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறார்கள். அதிலும், இந்தக் கோடைக்காலத்தில் தினமும் செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கும் அப்படியான வெகுசில அரிய மனிதர்களில் ஒருவர்தான் தேனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பெருஞ்சித்திரன்.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் திட்டச்சாலையின் இரு புறமும் செடிகளை நட்டுப் பராமரித்து வருகிறார் பெருஞ்சித்திரன். வழக்கமாகச் செடிக்கு தண்ணீர் ஊற்றும் முறையிலிருந்து மாறுபடும் பெருஞ்சித்திரன், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் டியூப்களை எடுத்துவந்து பாட்டில்களுடன் இணைத்து, அதன் மறு முனையைச் செடியின் வேர் பகுதியில் செலுத்திவிடுகிறார். கிட்டத்தட்டச் சொட்டுநீர் பாசனம்போல மெல்லச் செடிக்குத் தண்ணீர் சென்றுகொண்டேயிருக்கும். ஒரு முறை நிரப்பினால், மூன்று நாள்களுக்கு செடிக்குத் தண்ணீர் சென்றுகொண்டேயிருக்கும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U