👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., சீட்களின் எண்ணிக்கை 3,350 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே நடப்பாண்டில் கூடுதலாக 298 தமிழ் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
மாநிலத்தில் கடந்த ஆண்டு 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 3 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., சீட்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. கரூரில் புதிதாக அரசு மருத்துவக் கல்லுாரி துவங்கப்பட்டது. அக்கல்லுாரிக்கு எம்.பி.பி.எஸ்., சீட்களை ஒதுக்கக்கோரி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேபோல ஏற்கனவே 150 சீட்களுடன் இயங்கிய மதுரை, திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி நிர்வாகங்களும் கூடுதலாக தலா 100 சீட்களை கோரின. இதை ஏற்ற மருத்துவக் கவுன்சில் கரூர் கல்லுாரிக்கு 150 சீட்களை வழங்கியது. மதுரை, திருநெல்வேலி கல்லுாரிகளுக்கு கூடுதலாக 100 சீட்களை ஒதுக்கியது.
கூடுதல் மாணவர்களுக்கு வாய்ப்புஇதனால் தமிழக அரசு மருத்துவமனை கல்லுாரிகளில் இருந்த 3 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., சீட்கள், தற்போது 3 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளன. நடப்பாண்டிலேயே கூடுதலாக கிடைத்த 350 சீட்களுக்கு மாணவர் சேர்க்கை நடக்கவுள்ளது. கடந்தாண்டை விட கூடுதலாக தமிழக மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்., சீட்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 350 ஆக அதிகரித்து இருப்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இதில் 85 சதவீத சீட்கள் தமிழக மாணவர்களுக்கானது. கூடுதலாக கிடைத்த 350 சீட்களில் நம் மாநில மாணவர்கள் 298 பேர் படிக்கலாம்,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U