👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இதனால் எல்லா கடைகளும் இரவு நேரங்களிலும் திறந்திருக்கும் என்று மக்கள் நம்பினர். ஆனால் எல்லா கடைகளையும் திறந்து வைக்க முடியாது என்று அதற்கான சட்டத்தில் உள்ள பிரிவு, மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலாளர்கள் நலனுக்காக பல நிபந்தனைகளை விதித்து இந்த அனுமதியை தமிழக அரசு அளித்திருந்தாலும், சிறிய கடைகளுக்கு இந்த அனுமதி உத்தரவு பொருந்துமா? என்றால், அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இரவு 11 மணிக்குள்...
ஏனென்றால், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன் படி, இந்த அனுமதியைப் பெறும் கடைகள் அல்லது நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு, தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பாணையின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சாலை ஓரங்களில் காணப்படும் சிறிய கடைகளான டீ கடைகள், பெட்டிக் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், நடைபாதை உணவகங்கள், பழக்கடைகள், காய்கறிக் கடைகள், பலசரக்குக் கடைகள், சிறிய உணவகங்கள் போன்றவற்றை 24 மணி நேரமும் நடத்த முடியாது. போலீஸ் சட்டத்தின்படி இதுபோன்ற கடைகளை இரவு 11 மணிக்குள் மூடியாக வேண்டும்.
தொழிலாளிக்கு வருமானம்
ஒரு ஷிப்ட்-க்கு (8 மணிநேரம்) 4 ஊழியர்கள் வீதம் நியமித்து, 3 ஷிப்டுகள் (24 மணிநேரம்) நடத்தப்படும் டீ கடைகள், சிறிய உணவகங்களால் சாதாரண தொழிலாளிகளுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் அதுபோன்ற டீ கடைகள், சிறிய உணவகங்களெல்லாம், ரெயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள், பெரிய ஆஸ்பத்திரிகள் போன்ற மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U