ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது எப்படி வந்தது தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 02, 2019

ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது எப்படி வந்தது தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'டோத்' என்ற கணித மேதை மெட்ரிக் காலண்டரை உருவாக்கினார். அதில் ஒரு மாதத்தை மூன்று பத்து நாட்களாகப் பிரித்து ஒரு நாளை 10 மணி நேரமாக ஆக்கினார். அதில் ஒரு மணி நேரம் என்பதை 100 நிமிடங்களாகக் கணக்கிட்டார். இப்படி வரும் பொழுது தொடர்ந்து நடு இரவு கிடைத்தது.
ஒரு லட்சம் வினாடிகள், இக்காலத்தில் 24 மணிநேரம் கொண்ட ஒரு நாள் 86 400 வினாடிகள் மட்டுமே உள்ளன. காலப்போக்கில் இந்த மெட்ரிக் நாட்காட்டியை பின்பற்றாமல் போகவே விழா, பண்டிகைகள் சரிவர கொண்டாட முடியாமல் போனது. பிறகு இரவு பகலை 12 மணிகளாகப் பிரித்து 24 மணி நேரம் கொண்டுவரப்பட்டது. முன்பு மெசபடோமிய மக்கள் அறுபதின் மடங்கை வரையறுத்து அதையும் பயன்படுத்தினர். எகிப்திய கோயிலில் 3500 ஆண்டுகளுக்கு முன் காலத்தை உணர்த்தும் நீர்க் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
ஒரு நாளின் கூறுகளாக அதிகாலை, மத்தியானம், பிற்பகல், சாயங்காலம், முன் இரவு, நடுநிசி, பின்னிரவு, பிரம்ம முகூர்த்தம் என கால அடிப்படையில் ஒரு நாளை பத்து ஜாமங்களாகப் பிரித்தனர். பகல் 5, இரவு 5 ஜாமங்கள். காலை 6 முதல் 8.24 நிமிடம் வரை முதல் ஜாமம், 8.25 முதல் 10.48 வரை இரண்டாம் ஜாமம், 10.49 முதல் பிற்பகல் 1.12 வரை மூன்றாம் ஜாமம், 1.13 முதல் பிற்பகல் 3.36 வரை நான்காம் ஜாமம்,
3.37 முதல் மாலை 6 மணி வரை ஐந்தாம் ஜாமம். இதே வரிசையின்படி இரவிலும் கணிக்கப் பட்டன. 1 நாழிகை = 24 நிமிடம் 2 1/2 நாழிகை = 1 மணி 3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம் 7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம் 4 ஜாமம் = 1 பொழுது 2 பொழுது - 1 நாள் - தற்கால 24 மணிநேர அளவு
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews