முனைவர் பட்டங்களின் தரத்தை மதிப்பிடும் ஆய்வு: 150 பேர் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 15, 2019

முனைவர் பட்டங்களின் தரத்தை மதிப்பிடும் ஆய்வு: 150 பேர் விண்ணப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்த ஆய்வில் கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்கள் மூலம் வழங்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகளின் தரம் மதிப்பிப்படும். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்பட்ட முனைவர் பட்டங்களின் தரத்தை மதிப்பிடும் ஆய்வுக்கு சுமார் 150 பேர் விண்ணப்பிதுள்ளனர் என பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இந்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகளை மதிப்பீடு செய்யும் ஆறு மாத ஆய்வுக்கான அறிவிப்பை கடந்த மே 21ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்கள் மூலம் வழங்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகளின் தரம் மதிப்பிப்படும்.
ஜூன் 10ஆம் தேதிக்குள் இந்த மதிப்பீட்டுக்கு முனைவர் பட்ட ஆய்வுகளை சமர்ப்பிக்க அவகாசம் தரப்பட்டது. இதன்படி, கிட்டத்தட்ட 150 முனைவர் பட்ட ஆய்வுகள் தர மதிப்பீடு செய்வதற்காக வந்துள்ளன என யுஜிசி துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்துள்ளார். முனைவர் பட்ட ஆய்வுகளின் தரம் குறித்த உண்மை நிலவரத்தை அறிய இத்தனை பேர் ஆர்வமுடன் இருப்பது நல்ல அறிகுறி. இதன் மூலம் தற்போது உள்ள பிழைகளை திருத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார். “ஐஐடி, பல்கலைக்கழகங்கள், தன்னார்வ அமைப்புகள், தனிநபர்கள் என பல தரப்பிலிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றிலிருந்து ஆய்வுக்குரியவை இரண்டு, முன்று வாரங்களில் தேர்வு செய்யப்படும். ஆய்வு முறை, அனுபவம், திறனாய்வு மற்றும் ஒட்டுமொத்த ஆய்வுக்கான திட்டமிடல் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்யப்படும்” என்றும் பூஷன் தெரிவித்தார். கடந்த 2007-08ல் 13,237 முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளில் சுமார் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. 2017-18ல் பல்வேறு துறைகளில் மொத்தம் 34,400 முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
"நாடு முழுக்க முனைவர் பட்ட ஆய்வுகள் பற்றிய பதிவுகளை பேணும் ஒருங்கிணைந்த அமைப்பு இல்லாததால் முனைவர் பட்டங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது" என ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜா சேகர் பெல்லம்கொண்டா கூறுகிறார். "முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்பவர்கள் அவர்கள் தேர்வு செய்யும் தலைப்பில் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டிருப்பதைத் தெரியாமல் பல முறை ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விட்டது" எனவும் அவர் தெரிவிக்கிறார். "பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள தேர்வு செய்யப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவும் வழங்கப்பட்ட முனைவர் பட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்ட ஆய்வுகளின் தரத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அதிக எண்ணிக்கையில் முனைவர் பட்டங்களை வழங்குவதில் குறியாக இருக்கக்கூடாது." என்று யுஜிசி செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் தெரிவிக்கிறார்.
அறிவியல் மற்றும் கலை துறைகளில் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் தொடர்ந்து சம அளவில் இருந்துவந்தன. மொத்த ஆய்வுகளில் 70% இந்தத் துறைகளைச் சேர்ந்தவையாக இருந்தன. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அறிவியில் துறையில் முனைவர் பட்ட ஆய்வுகள் அதிகமாகியுள்ளன. இதுவே முனைவர் பட்டங்கள் அதிகமாக வழங்கப்படுவதற்குக் காரணமாக இருக்கும் என யுஜிசி கணிக்கிறது. "பல்வேறு உதவித்தொகைகள், அரசு ஊக்குவிப்பு மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையின் திட்டங்கள் ஆகியவற்றால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முனைவர் பட்ட ஆய்வுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது" என்கிறார் ராஜ்னிஷ் ஜெயின்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews