பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்க புதிய கமிட்டி அமைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 14, 2019

பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்க புதிய கமிட்டி அமைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார் தெரிவிக்க புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகள் குறித்து புகார்களைப் பெறவும், அந்தப் புகார்களின் அடிப்படையில் கல்லூரிகளில் ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், புதிய கட்டணக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்) அருள் அரசு தலைமையில் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் செந்தில், இளையபெருமாள் மற்றும் கோவை பொறியியல் கல்லூரி பேராசிரியர் தாமரை ஆகியோரைக் கொண்ட 4 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதுதொடர்பான புகார்களை இந்தக் குழுவிடம் மாணவர்களும், பெற்றோரும் தெரிவிக்கலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு தபால் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்கள் 044-22351018, 22352299, செல்லிடப்பேசி எண் 75987 28698 ஆகியவற்றில் குழுவின் தலைவரை நேரடியாகத் தொடர்புகொண்டும் புகார்களைத் தெரிவிக்கலாம். இதுகுறித்து கட்டணக் குழு தலைவர் அருள்அரசு கூறியது: மாணவர் விடுதிக் கட்டணம், பேருந்து கட்டணம் தொடர்பாக மாணவர்கள் இந்தக் குழுவிடம் புகார் தெரிவிக்கின்றனர். இந்தப் புகார்கள் தொடர்பாக கட்டணக் குழு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது. இந்தக் குழுவிடம் கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதுவும், உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்படும் புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews