👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஆந்திரபிரதேச மாநிலத்தில் மருத்துவ கல்லூரி மாணவியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
ஆந்திரபிரதேச மாநிலம் எல்லூரில் உள்ளது அல்லூரி சீதாராம ராஜூ அகாடமி ஆஃப் மெடிகல் சயின்ஸ் கல்லூரி. இந்தக் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள் தங்களுக்கு கோடைக் கால விடுப்பு அளிக்கவேண்டும் எனப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கு இருந்த மாணவி ஒருவரை காவல்துறையினர் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் காவல்துறை அதிகாரியிடம் பேச முற்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. அப்போது அங்கு சீருடையில்லாத காவலர் ஒருவர் அவர்கள் போராட்டத்தை படம் எடுத்துகொண்டிருந்தார். இதனால் அவரைப் படம் எடுக்கவேண்டாம் என்று கூறி மாணவிகள் தடுக்கச் சென்றனர்.
அத்துடன் மாணவி ஒருவர் அந்தக் காவலரிடமிருந்து செல்போனை பறிக்க முற்பட்டார். இதனையடுத்து அந்தக் காவலர் மாணவியை மிகவும் மோசமான முறையில் இழுத்து சென்று தாக்கினார். அதன்பிறகு அந்த மாணவியை கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மற்ற மாணவிகளிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கில் இழுத்து செல்லும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இப்போது ஆந்திர மாநிலத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U