👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் வாயிலாக ஆதார் எண்ணை முடக்கும் வசதியை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருவரின் ஆதார் எண்ணை மற்றொருவர் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன் படி, தனித்துவ அடையாள ஆணைய இணைய பக்கத்தின் வாயிலாகவோ, அல்லது செல்போன் குறுஞ்செய்தி மூலமாகவோ, ஆதார் எண்ணை முடக்கவோ அல்லது முடக்கியதை திரும்பப் பெறவோ முடியும்.
குறுஞ்செய்தி மூலம் இந்த வசதியைப் பெற 1947 என்ற எண்ணுக்கு GETOTP என்று டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட வேண்டும். இதை அடுத்து ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு 6 இலக்க ஓடிபி கடவுச்சொல் வந்து சேரும். அது வந்தவுடன், LOCKUID ஸ்பேஸ், ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண் ஸ்பேஸ் 6 இலக்க ஓடிபி கடவுச்சொல்லை டைப் செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் ஆதார் எண் முடக்கப்பட்டு விடும். அதற்கான தகவலும் செல்போனுக்கு வந்து சேரும்.
அதேவேளையில், குறுஞ்செய்தி மூலம்,. முடக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்றால், ஆதார் மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்க எண்ணை இதே போல் அனுப்ப வேண்டும். ஓடிபி வந்தவுடன், UNLOCKUID - ஸ்பேஸ் - மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்கம்- ஸ்பேஸ் - 6 இலக்க ஓடிபியை டைப் செய்து அனுப்பினால் முடக்கம் ரத்தாகி விடும்.
www.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆதார் எண்ணை முடக்கவோ அல்லது முடக்கியதை திரும்பப் பெறவோ முடியும். அந்த தளத்திற்குள் சென்று மை ஆதாரை கிளிக் செய்தால் ஆதார் சர்வீசஸ் என்று பட்டியல் விரியும். அதில் ஆதார் லாக் மற்றும் அன்லாக் என்பதை கிளிக் செய்ய வேண்டும். எது தேவையோ அதை கிளிக் செய்து, தேவையான விவரங்களை பதிவு செய்தாலே, ஆதாரை முடக்கவோ அல்லது முடக்கத்தை திரும்பப் பெறவோ முடியும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U