👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
'தமிழகத்தில் உதவி பேராசிரியர் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கான சிறப்பு கல்வித் தகுதியை பூர்த்தி செய்ய மூன்று ஆண்டுகள் காலஅவகாசம் வழங்க வேண்டும்' என தமிழ்நாடு உறுப்புக் கல்லுாரிகளின் கவுரவ விரிவுரையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அச்சங்க தலைவர் கதலி நரசிங்கப்பெருமாள் தெரிவித்துள்ளதாவது:அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறப்பு கல்வித் தகுதியாக செட் அல்லது நெட் தேர்ச்சி அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என யு.ஜி.சி., நிர்ணயித்துள்ளது.ஆனால் தமிழகத்தில் குறிப்பாக சுயநிதி கல்லுாரிகளிலும், பல்கலை உறுப்புக் கல்லுாரிகளிலும் சுழற்சி முறையில் இயங்கி வரும் அரசு கல்லுாரிகளிலும் 50 சதவீதம் ஆசிரியர்கள் இத்தகுதியை பூர்த்தி செய்யாமல் பல ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர்.
போதிய வழிகாட்டிகள் (கைடு) மற்றும் பொருளாதார சூழல் காரணமாக பலர் பிஎச்.டி.,க்கு பதிவு செய்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத நிலையில் உள்ளனர். மாநில அளவில் நடக்கும் 'செட்' தேர்வும் நடத்தப்படவில்லை.சுயநிதி கல்லுாரிகள், பல்கலை உறுப்புக் கல்லுாரிகளில் பிஎச்.டி., முடித்து பல ஆண்டுகளாக பணியாற்றியும் அவர்களை வழிகாட்டியாக அங்கீகரிக்கவில்லை.இதுபோன்ற சூழலால் சிறப்பு தகுதியை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. யு.ஜி.சி, உத்தரவை நடைமுறைப்படுத்தினால் நுாற்றுக்கணக்கான கல்லுாரிகள் மூடப்பட்டு மாணவர் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே சிறப்பு தகுதியை பூர்த்தி செய்ய மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செட் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U