👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத 6 லட்சத்து 4 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியாற்ற முடியும் என்று கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நடக்க வேண்டிய இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடக்கவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் இந்த ஆண்டு முதல் தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியர் பணிக்கு தாள்1, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தாள் 2 என ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் விண்ணப்பித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U