TNPSC-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..! எதுக்குன்னு தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

TNPSC-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..! எதுக்குன்னு தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
'டி.என்.பி.எஸ்.சி., அடுத்த அறிவிப்பு வெளியிடும் முன் ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை காலி பணியிடங்களில் நிரப்பாவிடில், அதை இந்நீதிமன்றம் கடுமையாக எடுத்துக் கொள்ளும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்தது.தஞ்சாவூர் பரமானந்தம் தாக்கல் செய்த மனுஉதவியாளர், எழுத்தர் பணி தேர்வுக்கு 2014 பிப்.,6 ல் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது. எழுத்துத் தேர்வில் பங்கேற்றேன். தேர்வானோரின் தற்காலிக பட்டியல் வெளியானது. எனது பெயர் இருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன்.
காலிப்பணியிடம் இருந்தால் அழைப்பதாக டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்தது. இதுவரை பதில் இல்லை.தேர்வாகி பணியில் சேராமல் உள்ள மற்றும் ராஜினாமா செய்தவர்களால் ஏற்பட்ட காலி இடத்தில் எனக்கு தகுந்த பணியிடம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு: அறிவிப்பின்படி காலிப்பணியிடம் இருந்தால், மனுதாரரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., பரிசீலிக்க வேண்டும். அடுத்த அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி., வெளியிடும் முன் ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இந்நடைமுறையை பின்பற்றாதது தெரியவந்தால் அதை இந்நீதிமன்றம் கடுமையாக எடுத்துக்கொள்ளும், என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews