TNPSC: புதிய அறிவிப்புக்கு முன் காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிசிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

TNPSC: புதிய அறிவிப்புக்கு முன் காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிசிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அடுத்த அறிவிப்பை வெளியிடும் முன் ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை காலிப்பணியிடங்களில் அமர்த்த வேண்டும் என டிஎன்பிசிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த பரமானந்தம் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 2014 ல் நடைபெற்ற எழுத்து தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பங்கேற்ற நிலையில் காலிபணியிட​ம் இருந்தால் அழைப்பதாக டிஎன்பிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், காலிபணியிடம் இருந்தால் மனுதாரின் கோரிக்கையை பரிசீலிக்கலாம் என்றும் புதிய அறிவிப்பு வெளியிடும் முன் ஏற்கனவே தேர்வானவர்களை காலிப்பணியிடங்களில் அமர்த்த வேண்டும் எனறும் நீதிபதி உத்தரவிட்டார். பணியிடங்களை நிரப்பிய பின் தேர்வுகளை நடத்துங்கள் என டி.என்.பி.எஸ்.சி.,க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2014ல் தேர்வாகிய தஞ்சாவூரை சேர்ந்த பரமாணந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு இதுவரை பணி வழங்கவில்லை என தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews