'டிக்' அடிச்சாச்சு! தபால் ஓட்டுப்பதிவு துவங்கியது... அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆர்வம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2019

'டிக்' அடிச்சாச்சு! தபால் ஓட்டுப்பதிவு துவங்கியது... அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆர்வம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் பணியாற்றும் அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது.லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவின் போது ஓட்டுச்சாவடிகளில், நான்கு முதல் ஐந்து ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். மாவட்டத்தில், 12 ஆயிரத்து, 284 பேர், தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 3,000க்கும் அதிகமான போலீசாரும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, தபால் ஓட்டு வழங்கப்பட்டு வருகிறது.சட்டசபை தொகுதி வாரியாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவி பேட்' கருவிகளை இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.ஓட்டுச்சாவடிகளில், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், 18ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்துவது; பிறகு, பதிவான ஓட்டுக்களை நீக்கி, தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, மெஷின்களை தயார்படுத்துவது, ஓட்டுப்பதிவுக்கு முன்னதாக, 'கன்ட்ரோல் யூனிட்' மற்றும் 'விவி பேட்'கருவிகளுக்கு 'சீல்' வைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.தொடர்ந்து, தேர்தல் பணியாற்றும் அலுவலருக்கான தபால் ஓட்டுப்படிவம் வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தல் பிரிவு அலுவலர்கள், பணி நியமன சான்றை ஆய்வு செய்து, தபால் ஓட்டுப்படிவங்களை வழங்கினர்.
'பேலட் சீட்' வழங்கல்ஒவ்வொருவரின், வாக்காளர் அடையாள அட்டைகளை, 1950' என்ற தேர்தல் கமிஷன் 'சாப்ட்வேரில்' சரிபார்த்து, தொகுதி வாக்காளர் என்பதை உறுதி செய்த பிறகே, சின்னத்துடன் வேட்பாளர் பட்டியல் அடங்கிய, வெள்ளை நிற 'பேலட் சீட்' வழங்கப்பட்டது. அதற்கு பிறகு, வாக்காளர் உறுதிமொழி படிவத்தில் (படிவம் '13-ஏ') விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, வருவாய்த்துறை அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்றனர். தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' தாசில்தார் ஜெய்சிங், தெற்கு தொகுதியில் சான்றொப்பம் வழங்கினார்.
தபால் ஓட்டுப்பதிவுபிறகு, தாங்கள் விரும்பும் வேட்பாளர் பெயர், சின்னத்துக்கு நேராக, 'டிக்' செய்து, அதை, 'படிவம் 13-பி'ல் வைத்து ஒட்டினர். அதற்கு பிறகு, '13 -ஏ' மற்றும் '13-பி' ஆகியவற்றை, படிவம் '13-சி' எனும் பெரிய உறையில் வைத்து ஒட்டினர். உறையின் மீது, விவரங்களை பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பமிட்டு, பிறகு தபால் ஓட்டு பெட்டியில் போட்டனர்.வேட்பாளர் பிரதிநிதிகள்ஓட்டுப்பதிவு முகாம் துவங்கும் முன்னதாக, தபால் ஓட்டுப்பெட்டி காலியாக உள்ளதை, வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில் உறுதி செய்து, பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.

ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு, அவர்கள் முன்னிலையிலேயே, பெட்டி திறக்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு சேர வேண்டிய தபால் ஓட்டு உறைகள் எண்ணப்பட்டு, வேட்பாளர் பிரதிநிதிகள் ஒப்புதலுடன், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
'ஸ்ட்ராங் ரூம்' தயார்தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள, தபால் ஓட்டுப்பதிவு அதிகாரிகள், சட்டசபை தொகுதிகள் மற்றும் தபால்துறையின் மூலமாக வரும், தபால் ஓட்டுக்களை பெற்று, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள, ஸ்ட்ராங் ரூமில், போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்படும்..
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews