கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் ஆசிரியர்கள் கூட்டு போராட்டக்குழு தீர்மானம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் ஆசிரியர்கள் கூட்டு போராட்டக்குழு தீர்மானம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணிபுரியும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்ட குழுவின், செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, புதுச்சேரி ஆசிரியர்கள் சங்கம், புதுச்சேரி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு, புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தொடக்க பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், தலைமையாசிரியர்கள் நிலை 1 மற்றும் நிலை 2, காரைக்கால் ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், மனோகரன், விஜயகுமார், செந்தில்குமரன், கிருஷ்ணன், மோகன்குமார், காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், முன் மழலையர் பள்ளி ஆசிரியர் முதல் பள்ளி முதல்வர் வரை காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும், பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக நிரப்பிட வேண்டும். ஆசிரியர்கள் பணியிட மாற்றம் கலந்தாய்வின் மூலமாக நடத்திட வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பதவியில், 60 சதவீதம் தலைமையாசிரியருக்கும், 40 சதவீதம் துணை முதல்வர் மற்றும் முதல்வர்களுக்கு வழங்கிட வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது. பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள் நேரடியாக விரிவுரையாளராக பணியில் சேர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் ஆகி விடுகின்றனர். அவர்களுக்கு, தொடக்கம், நடுநிலை, உயர்நிலை பள்ளிகள் குறித்து தெரியாது. அதனால் தான், கல்வியின் தரம் சீர்குலைந்துள்ளது. எனவே, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறையில் முதன்மை கல்வி அதிகாரி, இணை இயக்குனர் பதவிகள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews