👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் விமான என்ஜின் பராமரிப்புக்கான அதி நவீன கோல்ட் ஸ்பிரே ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனமொன்றில் இத்தகைய ஆய்வகம் தொடங்கப்படுவது நாட்டிலேயே இது முதலாவதாகும்.
ஜி.இ. இந்தியா நிறுவனம் மற்றும் ஐஐடி சென்னை ஆகியவற்றின் சார்பில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியில் ஒரு பங்கை மத்திய அரசு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விமானத்தின் என்ஜின்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தேய்மானம் அடைந்துவிட்டால், அதனை மறுசீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான தொழில்நுட்ப வசதிகள் இந்தியாவில் குறைவாகவே உள்ளன.
இதன் காரணமாக பெரும்பாலான பராமரிப்புப் பணிகள் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனே மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நிலையை மாற்றி உள்நாட்டிலேயே அத்தகைய வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, விமான பராமரிப்புக்கான கோல்ட் ஸ்பிரே சாதனங்களுடன் கூடிய ஸ்மார்ட் ஆய்வகம் ஐஐடி சென்னையில் அமைக்கப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஐஐடி சென்னையின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, பேராசிரியர் எம்.காமராஜ், ஜி.இ. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலோக் நந்தா ஆகியோர் பங்கேற்றனர். மெக்கானிக்கல், மெட்டீரியல், கெமிக்கல் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆய்வகம் வரப்பிரசாதமாக இருக்கும் என்று குறிப்பிட்ட இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் விமானப் பராமரிப்பு தொழில்நுட்ப ஆற்றல் வலுவடையும் என்றார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்