👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
ஏழை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கூறினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு நீதிபதி அரிபரந்தாமன் பேசியது: நீட் தேர்வினால் உருவாகும் மருத்துவர்கள் தற்போதுள்ள மருத்துவர்களைப் போல் சேவை மனப்பான்மையோடு இருக்க மாட்டார்கள். நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வணிகமாக்கப்படுகிறது. கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்ததற்கும் நீட் தேர்வைக் கொண்டு வருவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
நீட் சாதாரண மக்களின் கல்வியையும், மாநில உரிமையையும் பறிக்கிறது. ஏழைக்குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை. பள்ளிக் கல்விக்குத் தனியார் நிறுவனங்களைத் தேடும் பெற்றோர், உயர்கல்விக்கு அரசுக் கல்லூரிகளை நாடுகின்றனர் என்றார் அவர். விழாவில் மருத்துவர்கள் எஸ்.காசி, ஜே.அமலோர்பவநாதன், ஆர்.பி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்