அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்தவர்களுக்கு கிடுக்கிப்பிடி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2019

அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்தவர்களுக்கு கிடுக்கிப்பிடி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு கிடுக்கிபிடி போடும் வகையில் அவர்கள் பற்றிய விபரங்களை திரட்டும் பணியில் பள்ளி கல்வித் துறை அதிரடியாக இறங்கி உள்ளது.புதுச்சேரி அரசு நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்கள், பணியில் இருக்கும்போது, உயர்கல்வி படிக்கவும், சொத்துக்கள் வாங்கவும், வெளிநாடு செல்லவும், தங்கள் துறையின் முன் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் உயர்கல்வி படிப்பது, சொத்துக்கள் வாங்குவது உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதே நேரத்தில், அனுமதி பெற்று, உயர்கல்வி படித்து முடித்தால், அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் உயர்கல்வி தகுதியை பொறுத்து ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், பல துறைகளில் இது போன்று அனுமதி பெறாமல் உயர் கல்வி படிக்கின்றனர்.பதவி உயர்வு நேரத்தின் போது மேற்படிப்பு சான்றிதழ்களை காண்பித்து தங்களுக்கு முன்னுரிமை வழங்கும்படி கேட்கும்போது சிக்கல் ஏற்படுகிறது.குறிப்பாக பள்ளி கல்வித் துறையில் இதுபோன்ற சிக்கல் அதிகம் உள்ளன. இந்த ஆண்டு, பதவி உயர்வு, உயர்கல்வி ஊக்க ஊதியம், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் பலர் கடிதம் அனுப்பி அவற்றை பரிசீலித்த போது, பெரும்பாலானவர்கள் தங்களின் துறை தலைவர்களிடம் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, முன் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்தவர்கள் குறித்து தகவல்கள் திரட்டும் பணியில், கல்வித்துறை ரெடியாகி வருகிறது.அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்தவர்கள் அடுத்த மாதம் 20 ம் தேதிக்குள் தங்களது தன்னிலை விளக்கத்தை அனுப்பி வைக்க வேண்டும் என ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக அவர்களிடம் உயர்கல்வி படித்தது எப்படி; படிக்க சென்ற போது, பணியின் நேரம் கைவிடப்பட்டதா, உயர்கல்வி படித்த காலம் எப்போது, துறை தலைமைக்கு தெரியாமல், உயர்கல்வி படித்த காரணம் என்ன என, பல்வேறு வகையில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.சரியான விளக்கம் தராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பதவி உயர்வை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி கல்வித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, பதவி உயர்வு கனவில் முன் அனுமதி பெறாமல் லீவு போட்டுவிட்டு படித்த ஆசிரியர்களை கலக்கமடைய செய்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews