உதவி பொறியாளர் தேர்வு முடிவு ஆணைய அனுமதிக்கு காத்திருப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 01, 2019

உதவி பொறியாளர் தேர்வு முடிவு ஆணைய அனுமதிக்கு காத்திருப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
முதல் முறையாக, நேர்காணல் இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ள, 325 உதவி பொறியாளர்களின் பட்டியலை வெளியிட, தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக, மின் வாரியம் காத்திருக்கிறது.பட்டியல்தமிழ்நாடு மின் வாரியம், எழுத்து தேர்வு வாயிலாக மட்டும், எலக்ட்ரிகல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர்கள் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய, 2018 டிசம்பர், 30ல் தேர்வு நடத்தியது. அண்ணா பல்கலை நடத்திய இந்த தேர்வில், 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
மின் வாரியத்தில், முதல் முறையாக, நேர்காணல் இன்றி, எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுப்போருக்கு, அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், வேலைக்கான ஆணை வழங்கப்பட உள்ளது. எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில், ஒரு பதவிக்கு, ஐந்து பேர் என, பிப்ரவரியில், சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். தொடர்ந்து, தகுதியான நபர்கள், தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களின் பட்டியலை வெளியிட இருந்த சமயத்தில், மார்ச், 10ல், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததால், தேர்வு முடிவை வெளியிடவில்லை. அனுமதிலோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, 18ம் தேதி முடிந்து விட்டது.இதையடுத்து, தேர்வு முடிவை வெளியிட, மின் வாரியம், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை கோரியுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்த உடன், உதவி பொறியாளர் பதவிக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews