👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
கல்வியாளர் வீட்டில் ரூ.5000 கோடி பதுக்கல்; மத்திய தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்: ஆர்.எஸ்.பாரதி
தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர்களிடம் திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.அமைச்சர்கள் பதுக்கி வைத்துள்ள பணம், கல்வியாளர் வீட்டில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர் வில்சன், கிரிராஜன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:
''இதுவரை 12 புகார்களையும், காவல் அதிகாரிகளின் பட்டியலையும்அளித்துள்ளோம். பலர் ஆளுங்கட்சியின் ஏஜென்டுகளாகச் செயல்படுகிறார்கள் அவர்களைத் தேர்தல் பணியில் அனுமதித்தால் நியாயமான தேர்தலாக நடக்காது என்று தெரிவித்துள்ளோம்.
குறிப்பாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது குட்கா ஊழல் வழக்கு உள்ளது. அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் காவல்துறை இயங்கினால் நியாயம் கிடைக்காது என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.
அதேபோன்று அதிமுக மீது என்ன புகார் கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை. முதல்வரே ராணுவ வீரர்களின் பெயர் சொல்லி ஓட்டு கேட்கிறார் என்பது குறித்தும் புகார் அளித்துள்ளோம். காது கொடுத்துக் கேட்டுள்ளனர். நடவடிக்கை வரும் என்று நம்புகிறோம்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி சபேசன் என்பவரிடம் ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதேபோன்று அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கெங்கே பணத்தை பதுக்கி வைத்துள்ளார். வாய்கிழிய பேசுகிறாரே அமைச்சர் ஜெயக்குமார் அவர் என்னென்ன வேலை செய்கிறார், எங்கெங்கே அவரது பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பதையெல்லாம் சேகரித்து வருகிறோம்.
நிச்சயமாக உங்களுக்குச் சொல்வோம். ஒரு கல்வியாளர் வீட்டில் ரூ.5000 கோடி பதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அதுகுறித்து புகார் கொடுத்துள்ளோம். அதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்