தமிழகத்தில் மொத்த தபால் ஓட்டுக்கள் எத்தனை? இது வரை எத்தனை தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளது அதன் முழு விவரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

தமிழகத்தில் மொத்த தபால் ஓட்டுக்கள் எத்தனை? இது வரை எத்தனை தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளது அதன் முழு விவரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

தமிழகத்தில் 3,27,903 பேருக்கு தபால் வாக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் நேற்று வரை 47,610 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது எனவும் கூறினார். தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் 12 ஏ நேற்று வழங்கப்பட்டது. பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களிலேயே வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுகளை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் செலுத்தினர். தொடர்ந்து வரும் 14ம் தேதி இரண்டாவது கட்டமாக விடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு தபால் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக சத்யபிரதா சாஹு தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது, நேற்று வரை 47,610 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதேபோல மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளில் தலா ஒரு வீல் சேர் மற்றும் உதவியாளர் ஒரு நபரும் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோன்று நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு, தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று உதகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், ரூ.17.11 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். முதல்வரின் வாகனத்துக்கு பின்பாக வந்துகொண்டிருந்த வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்ததாக ரூ.17.11 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த பணம் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews