👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில் 3,27,903 பேருக்கு தபால் வாக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் நேற்று வரை 47,610 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது எனவும் கூறினார். தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் 12 ஏ நேற்று வழங்கப்பட்டது. பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களிலேயே வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுகளை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் செலுத்தினர். தொடர்ந்து வரும் 14ம் தேதி இரண்டாவது கட்டமாக விடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு தபால் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக சத்யபிரதா சாஹு தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட இருப்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்