பிளஸ்2 மாணவர்களுக்கு மீண்டும் ஒரே பாடப்புத்தகம் 2019-20ம் கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வருகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

பிளஸ்2 மாணவர்களுக்கு மீண்டும் ஒரே பாடப்புத்தகம் 2019-20ம் கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வருகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு 2019-20ம் கல்வி ஆண்டிலேயே முக்கிய பாடங்களுக்கு ஒரே பாடப்புத்தகம் என்ற முறையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மேல்நிலைக்கல்வியில் பிளஸ்1 வகுப்புக்கு கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய பாடத்திட்டத்தின்படி அனைத்து பாடங்களிலும் குறிப்பாக இயற்பியல், வேதியியல், கணிதம், கணக்குப்பதிவியல் பாடங்களில் இரண்டு பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிளஸ்1 மாணவர்களுக்கு அதிக மனஅழுத்தமும், திறன் குறைந்த மாணவர்களின் தேர்ச்சி வீதம் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டது.
அதேபோல் பிளஸ்2 மாணவர்களுக்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கும் இரண்டு பாடப்புத்தகங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக மேல்நிலைக்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மீண்டும் ஒரே பாடப்புத்தகம் என்ற நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, 2019-20ம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வர ஏதுவாக ஏப்ரல் மாதத்துக்குள் அந்த பாடப்புத்தகங்களை ஒரே பாடப்புத்தகமாக தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews