தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக 19 மாணவர்கள் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முதுநிலைப் பட்டப் படிப்புகளும், செவிலியப் படிப்புகளும் உள்ளன. இந்த வளாகத்தில் 8 விடுதிகள் உள்ளன.
இவற்றில் ஏறத்தாழ 900 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், இளநிலை மருத்துவம் நான்காமாண்டு பயிலும் 4 மாணவர்கள், 5 பயிற்சி மருத்துவர்கள் உள்பட மொத்தம் 19 மாணவர்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தது: விடுதியில் மாணவர்கள் சிலர் தொடர்ந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ச்சியாக மது அருந்திக் கொண்டு தகராறு செய்து வந்தனர். இவர்களை பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை கல்லூரி ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவின்படி, 19 மாணவர்களையும் 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளோம். இதற்கான ஆணை புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U