10ம் வகுப்பில் தேர்ச்சி: நரிக்குறவர் சமூக மாணவருக்கு பாராட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

10ம் வகுப்பில் தேர்ச்சி: நரிக்குறவர் சமூக மாணவருக்கு பாராட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நரிக்குறவ இனத்தை சார்ந்த 8 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்ததை உற்சாகமாக கொண்டாடினர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நரிக்குறவ இனத்தை சார்ந்த 8 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்ததை உற்சாகமாக கொண்டாடினர். இம்மாணவர்கள், தமிழக அரசின் உண்டு உறைவிடப்பள்ளி மூலம் ஆரம்ப கல்வி பயின்று தொடர்ந்து சிறப்பு கல்வி கற்றுள்ளனர். சிவகங்கை அருகே 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் இன மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை அருகே பழமலை நகரில் நரிக்குறவர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மக்கள் தொழில்ரீதியாக பல்வேறு ஊர்களுக்கு செல்வதால் இங்குள்ள மாணவ, மாணவிகளின் படிப்பும் அவ்வப்போது பாதியிலேயே நிறுத்தப்பட்டு விடும். இதனால் இங்குள்ள மாணவர்கள் தொடக்கப்பள்ளி படிப்பை தாண்டுவதே கடினமாக உள்ளது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு சென்று படிப்பது எப்போதாவது அபூர்வமாக நடக்கும்.
இக்குடியிருப்பில் உள்ள சிவானந்தம் மகன் சிவம் (14), சிவகங்கை, திருப்புத்தூர் சாலையிலுள்ள கே.ஆர்.அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இவர், மொத்தம் 232 மதிப்பெண் எடுத்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இக்குடியிருப்பில் இருந்து பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவர் என்பதால் குடியிருப்பு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தேர்ச்சி பெற்று வந்த மாணவர் சிவத்திற்கு ஆரத்தி எடுத்து உற்சாகமான வரவேற்பளித்தனர். மாணவர் சிவத்தை, பள்ளி தலைமையாசிரியர் பொக்கிஷம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews