👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் 5,499 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் இந்த அரசுப் பள்ளிகளில் இருந்து 3.7 லட்ச மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். அதில் 3.4 லட்சம் (92.48%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தச் சூழலில் 10-ம் வகுப்பு தேர்வில் நூற்றுக்கு நூறு தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால் அதன் விவரம் வெளியிடப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘10-ம் வகுப்பு தேர்வில் ஒட்டுமொத்தமாக 6,100 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் 800-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தமுள்ள அரசு பள்ளிகளில் இது 15 சதவீத அளவில்தான் உள்ளது.
மேலும், கடந்த ஆண்டு 1,687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றிருந்தன. அதைவிட சரிபாதியாக இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை நிலவரம் இருக்கிறது. தேர்வு முறை மாற்றம் மற்றும் கடினமான வினாத்தாள் உள்ளிட்ட காரணங்களால் 100% தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை சரிந்துள்ளது’’ என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U