மருத்துவ அறிக்கையில் அலட்சியம்... மாணவிக்கு நேர்ந்த கொடுமை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 27, 2019

மருத்துவ அறிக்கையில் அலட்சியம்... மாணவிக்கு நேர்ந்த கொடுமை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
17வயது மாணவி மரண வழக்கில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார் என்பதை மருத்துவ அறிக்கையில் குறிப்பிடாத தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற போது, 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி அரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக கூறியதை அடுத்து, காவல்நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நவம்பர் 10 ஆம் தேதி அந்த மாணவி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை செய்யாமல் மாணவியின் உடலை மருத்துவர்கள் ஒப்படைத்து விட்டனர்.
குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராமமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக சதிஷ் மற்றும் ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் நவம்பர் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மருத்துவ அறிக்கையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததை மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. இதனால் முதல் தகவல் அறிக்கையிலும் அந்த வார்த்தை இடம்பெறவில்லை. மாணவியின் கேஸ் ஹிஸ்டரியை சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பார்த்திருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது. ஆனால் மாணவியோ, அவரது தாயாரோ இதுபற்றி தங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர். தங்களால் முடிந்த அளவு மாணவிக்கு சிறப்பாகவே சிகிச்சை அளித்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவுக்கு எழுதிய கடிதத்தில், முக்கியமான இந்த வழக்கில் மிகவும் மெத்தனமாக செயல்பட்ட தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஜான் ஆபிரகாம், அறிவுமணி, ராஜேஷ்குமார், சுபாஷ் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த கடிதத்தை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு எட்வின் ஜோ அனுப்பி வைத்து 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் 4 பேர் மீதும் தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews