அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்படுமா? பெண்கள் எதிர்பார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 13, 2019

அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்படுமா? பெண்கள் எதிர்பார்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கடலுார் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களை, மழலையர் பராமரிப்பு மையங்களாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், வேலைக்கு செல்லும் பெண்கள் 5 வயது வரையுள்ள அவர்களுடைய குழந்தைகளை பராமரிப்பதில் மிகுந்த சிரமம் அடைந்தவர். இதை கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஜெ., 2015ல், 110 விதியின் கீழ், அங்கன்வாடி மையங்களில், மழலையர் பராமரிப்பங்களாக தரம் உயர்த்த உத்தரவிட்டார். அதன்படி, பெரம்பலுார், கன்னியாகுமாரி, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், வேலுார், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில், 211 மழலையர் பராமரிப்பககங்கள் முதற்கட்டமாக துவங்கப்பட்டன.
அங்கன்வாடி மையங்களோடு இணைந்து செயல்படும், இந்த மழலையர் பராமரிப்பகங்களுக்கு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த, 2 கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு, பராமரிப்பகங்கள் சிறப்பாக செயல் படுகின்றன. கடலுார் மாவட்டத்திலும், வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர் கொள்கின்றனர். கணவர், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. எனவே, கடலுார் மாவட்டத்திலும், தற்போதுள்ள அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த வேண்டுமென பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews