அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய மக்கள்: சுரண்டை அருகே நெகிழ்ச்சி சம்பவம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 28, 2019

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய மக்கள்: சுரண்டை அருகே நெகிழ்ச்சி சம்பவம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சுரண்டை அருகே அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்களை பொதுமக்கள் சீர்வரிசையாக வழங்கினர். சுரண்டை அருகேயுள்ள துவரங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளிக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர் பங்களிப்புடன் கல்விஉபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊர் எல்லையில் இருந்து பொதுமக்களும் பெற்றோரும் மேள தாளம் முழங்கமேஜை, நாற்காலிகள், டிரம், கடிகாரங்கள், உலக வரைபடங்கள், கல்வி கற்பிக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக சுமந்தபடி ஊர்வலமாக கொண்டுச் சென்று தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினர். பொதுமக்களை மாணவ, மாணவியர் மலர் தூவி வரவேற்றனர்.
தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமாரி லதா, ஊர் நல கமிட்டி புரவலர் முத்தையா சாமி, ஊராட்சி முன்னாள் தலைவர் பூமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சீனிவாசகம் வரவேற்றார். மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ்சிறப்புரை ஆற்றினார். சங்கரபாண்டியன் வாழ்த்தி பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன. ஊராட்சி முன்னாள் தலைவர் ராமாத்தாள், துணைத் தலைவர் தங்கதுரை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நதியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் நவமணி செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews